தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவளத்தில் வடமாநில வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

திருப்போரூர்: கோவளத்தில் வடமாநில வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை, கோவளத்தில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திசம்பர் (45) என்பவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார்.
Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்றுவிட்டு ரயில் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை சென்னைக்கு திரும்பிய இவர், கோவளம் சந்திப்பில் இறங்கி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.  அப்போது, 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், திசம்பரை மடக்கி செல்போன், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், தரமறுத்து கூச்சல் போட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், திசம்பரின் கைகள் மற்றும் தலையில் வெட்டிவிட்டு, அவரிடமிருந்து செல்போன், 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.

இதில், பலத்த காயமடைந்து மயங்கி கிடந்த திசம்பரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கோவளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநில வாலிபரிடம் செல் போன், பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News