கோவளம் அருகே 223 ஏக்கரில் ரூ.100 கோடியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா : சென்னைவாசிகளுக்கு ஈ.சி.ஆர். பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலம்!!
Advertisement
கோவில்கள், சிற்பங்கள், நாட்டுப்புற தெய்வங்கள், இசைத்தோட்டம் அமைக்கப்படுகிறது. விஹாரம் முழுமையாக குழந்தைகள் மற்றும் விளையாட்டு பகுதிக்கானது என சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ளது. ஒளிரும் பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, கிரக தோட்டம், மலர் தோட்டம் போன்றவை அமைய உள்ளது.சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கும் 25,000 பேர் கூடும் வகையில் 13 ஏக்கர் நிலத்தில் மைதானம் அமைய உள்ளது.அனைத்து வகை விளையாட்டு மைதானங்கள், ஒரு பிரத்யேக ATV & Go-Kart Zone ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது. சென்னைவாசிகளுக்கு ஈ.சி.ஆர். பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலமாக அமையவிருக்கிறது.
Advertisement