தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோத்தகிரி நகர் பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்க கோரிக்கை

கோத்தகிரி : கோத்தகிரி நகர் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மூலம் முறையாக குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் சாலையிலேயே குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.கோத்தகிரி நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

மேலும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கிராம மக்கள் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

இதில் குறிப்பாக ராம்சந்த்,கிளப் ரோடு,சக்திமலை செல்லும் சாலை, குப்பட்டிகம்பை, டானிங்டன், காமராஜர் சதுக்கம் ஆகிய பகுதிகளில் கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட வேண்டிய குப்பை தொட்டிகள் கடந்த சில நாட்களாக வைக்கப்படாததால் பொதுமக்கள் சாலைகளிலேயே குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News