தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை உலா

*வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது.

அவ்வாறு இடம் பெற்றுள்ள காட்டு யானைகள் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள மாமரம், குஞ்சப்பனை, முள்ளூர், தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது.மேலும் உணவு தேடி முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக தேயிலை, காப்பி தோட்டங்கள், சாலைகளில் உலா வருவதால் கோத்தகிரி மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக எவ்வித அச்சமும் இல்லாமல் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே சாலையில் காட்டு யானைகள் உலா வந்தால் புகைப்படம் எடுப்பது, கூச்சலிட்டு தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News