தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி குடும்பம் கேட்டால் அமேதியை திருப்பி தந்து விடுவேன்

அமேதி: “உத்தரபிரதேச அமேதி தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரியம், அவர்கள் அதை எப்போது கேட்டாலும் திருப்பி தந்து விடுவேன்” என காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரசேத்தின் அமேதி தொகுதிக்கு 5ம் கட்டமான மே 20ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. பாஜ வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார்.
Advertisement

இந்நிலையில் அமேதியின் முசாஃபிர்கானாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் கிஷோரி லால் சர்மா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பாஜ ஆட்சியில் அமேதி தொகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனம், காகித உற்பத்தி ஆலைகள், பெரும் உணவுப் பூங்கா போன்ற பல நிறுவனங்கள் அமேதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளன. அமேதி - உஞ்சஹார் ரயில் பாதை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அமேதி தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரியம். அவர்கள் தொகுதியை அரசியல் ரீதியாக பார்க்கவில்லை அங்குள்ள மக்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே நினைக்கின்றனர். விலை மதிப்பற்ற இந்த தொகுதியில் காங்கிரஸ் என்னை நிறுத்தி உள்ளது. அவர்கள் எப்போது கேட்டாலும் நான் தொகுதியை தந்து விடுவேன்” என்று தெரிவித்தார்.

Advertisement