தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்

*மாநகராட்சிக்கு கோரிக்கை
Advertisement

நாமக்கல் : கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில், கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாய முன்னேறக்கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், நாமக்கல் மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மோகனூர் மெயின் ரோட்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கொண்டிசெட்டிபட்டி ஏரி உள்ளது.

இந்த ஏரி மிகவும் புகழ்வாய்ந்த ஏரியாகும். மேலும் அப்பகுதியில் விவசாய தோட்டங்களில் உள்ள கினறுகள் மற்றும் பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களுக்கு, இந்த ஏரி தண்ணீரே நீராதாரமாக விளங்கி வருகிறது.

அப்பகுதி மக்கள் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அந்த ஏரி கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏரிக்கரையில் அரசு தொடக்கப்பள்ளியும், சிறுவர் பூங்காவும் அமைந்துள்ளது.

இந்நிலையில், அந்த ஏரியில் நாமக்கல் மாநகராட்சி கழிவுகள் நேரடியாக வந்து கலக்கிறது. இதனால் அடிக்கடி ஏரியில் மீன்கள் செத்து மிதந்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது.

கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் கழிவு நீர் கலப்பதை மாநகராட்சி உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, அந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த, மாநகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement