தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சீமை கருவேல முள் செடிகள்

*நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

Advertisement

மயிலாடுதுறை : கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள சீமை கருவேல முள் செடிகளை அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையின் வலது கரை சாலையில் வடரங்கம், பனங்காட்டங்குடி,சரஸ்வதிவிளாகம் ,சந்தபடுகை,அளக்குடி, மகேந்திரப்பள்ளி ஆகிய இடங்களில் சாலையின் இரு புறங்களிலும் சீமை கருவேல முள் செடிகள் நீண்டு வளர்ந்து சாலையை அடைத்துக் கொண்டு இருந்து வருகின்றன. இதனால் சாலை பெரிதும் மூடப்பட்டுள்ளது.

சாலையின் பெரும்பகுதி சீமை கருவேல முள் செடிகளால் சூழப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர கிராம மக்கள் சாலையில் செல்லும்போது மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்லும் விவசாயிகள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது சாலை அடைத்துக் கொண்டிருக்கின்ற முள் செடிகள் உடலில் பட்டு ஆடைகள் கிழிகின்றன.

முள் செடிகள் உடலில் படுவதால் உடல் காயம் ஏற்படுகிறது.மேலும் கண்களில் பட்டால் கண்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. கால்நடையாக இரவு நேரங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சீமை கருவேல முள்செடிகள் சாலையை அடைத்துக் கொண்டு இருப்பதால் சாலையோரம் உள்ள அடர்ந்த புதர் போன்ற பகுதியிலிருந்து விஷ பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் சாலையில் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கால்நடையாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே ஆற்றின் கரையோர கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்டு வளர்ந்து சாலையை மறைத்துக் கொண்டிருக்கின்ற சீமை கருவேல முள்செடிகளை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்றின் கரையோர கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement