தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொள்ளிடம் அருகே புது மண்ணியாறு பாசன வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாய தாமரை

*அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே புது மண்ணியாறு பாசன வாய்க்காலை சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வருவது புது மண்ணயாறு பாசன வாய்க்கால்.

இது தஞ்சை மாவட்டத்தில் மணஞ்சேரி என்ற இடத்தில் காவிரியிலிருந்து பிரிந்து இறுதியில் கொள்ளிடம் வழியாக சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலந்து பின்னர் வங்க கடலில் சங்கமித்து வருகிறது.

கொள்ளிடம் பகுதியில் மட்டும் சுமார் 10,000 திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த பிரதான பாசன வாய்க்காலில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று பாசன வசதி அளித்து வருகிறது.

புது மண்ணியாறு கொள்ளிடம் பகுதியில் பழையபாளையம் என்ற இடத்தில் உப்பனாற்றில் பிரிந்து அதிகப்படியாக வரும் நீரை வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்று இறுதியில் தாண்டவன்குளம், புதுப்பட்டினம், தற்காஸ் வழியாக செல்லும்போது குறுகிய வாய்க்காலாக சென்று முடிகிறது. இந்த வாய்க்கால் இந்த வருடம் தூர்வாரி ஆழ்படுத்தப்பட்டது. ஆனால் இதில் தற்காஸ் என்ற இடத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலை போர்த்தியது போன்று ஆகாய தாமரை வளர்ந்து சூழ்ந்துள்ளது.

இந்த ஆகாயத்தாமரையை சாதாரணமாக அகற்றி விடலாம். அப்படி அகற்றினால் தண்ணீர் மேலும் சற்று வேகமாகச் சென்று வெளியேற வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் விவசாயிகள் ஆகாய தாமரைக் குறித்து கருத்து தெரிவிக்கையில், ஆகாய தாமரை வாய்க்காலில் வளர்ந்திருப்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

தண்ணீர் செல்வதை அது தடுக்கவும் வாய்ப்பில்லை. தண்ணீரின் மேல் பகுதியில் மிதந்த நிலையில் இது வளர்ந்து வருகிறது. ஆகாயத்தாமரை வாய்க்காலில் உள்ள தண்ணீரை எளிதில் நீராவி ஆக்கி வாய்க்காலை வற்றவிடாமல் தடுக்கிறது.

தண்ணீரை மாசுபடாமல் காத்து நிற்கிறது. வாய்க்காலில் உள்ள தண்ணீர் எப்போதும் குளிர்ச்சியாக வைப்பதற்கும் நிலத்தடி நீரை தொடர்ந்து பாதுகாப்பதற்கும் இந்த ஆகாயத்தாமரை உதவியாக இருந்து வருகிறது.

இதனால் ஆகாயத்தாமரையை முற்றிலும் அகற்ற வேண்டியதில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். இருந்தும் அதிகமாக ஆகாயத்தாமரை செடிகள் இருக்கும் இடத்தில் மட்டும் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News