தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்லம் கலெக்டர் அலுவலக வளாக குண்டு வெடிப்பு வழக்கு: மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

Advertisement

திருவனந்தபுரம்: கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு பழைய ஜீப்பில் வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து என்ஐஏ விசாரித்தது. என்ஐஏ நடத்திய தீவிர விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் அலி (31), சம்சுன் கரீம் ராஜா (33), தாவூத் சுலைமான் (27), சம்சுதீன் மற்றும் முகம்மது அயூப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கொல்லம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது முகம்மது அயூப் அப்ரூவராக மாறினார்.

விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பாஸ் அலி, சம்சுன் கரீம் ராஜா மற்றும் தாவூத் சுலைமான் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி கோபகுமார் உத்தரவிட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து சம்சுதீன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அப்பாஸ் அலி, சம்சுன் கரீம் ராஜா மற்றும் தாவூத் சுலைமான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோபகுமார் உத்தரவிட்டார். அப்பாஸ் அலி மற்றும் தாவூத் சுலைமானுக்கு 3 ஆயுள் தண்டனையும், சம்சுன் கரீம் ராஜாவுக்கு 4 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Advertisement