தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்லம் அருகே கொடூரம்; கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டி கழுத்து அறுத்து கொலை: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டியை கழுத்து அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா அருகே வட்டத்தரை பகுதியை சேர்ந்தவர் சுலேகா பீவி (68). அவரது மகள் வழி பேரன் ஷஹனாஸ் (30). போதைப் பொருளுக்கு அடிமையானவர் ஆவார். ஒழுங்காக வேலைக்கு செல்ல மாட்டாராம். தாய் மற்றும் பாட்டியை மிரட்டி போதைப் பொருளுக்காக பணம் வாங்குவது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல பாட்டி சுலேகா பீவியிடம் கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார்.

Advertisement

ஆனால் அவர் கொடுக்க மறுத்து இருக்கிறார். தொடர்ந்து ஷஹனாஸ், பாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்து உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தார். இந்த சமயத்தில் ஷஹனாசின் தாய் வெளியே சென்று இருந்தார். அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது கட்டிலுக்கு அருகே ரத்தக்கறை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதைத்தொடர்ந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது தாய் சுலேகா பீவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுலேகா பீவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஷஹனாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News