தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்கத்தாவில் பேய் மழை; மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அலட்சியம்?

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 22ம் தேதி இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 332 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்த வரலாறு காணாத மழையால் நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

Advertisement

விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, துர்கா பூஜை விடுமுறையும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நீரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பிகள் மீது மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவின் புறநகர் பகுதிகளிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த உயிரிழப்புகளுக்கு கொல்கத்தா மின்சார விநியோகக் கழகத்தின் அலட்சியமே காரணம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, வரும் 25ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வரலாறு காணாத மழையால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Related News