கொல்கத்தாவில் 42 நாள் போராட்டம் முடிந்தது ஜூனியர் டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்: 42 கிமீ பொதுமக்கள் தீப்பந்த பேரணி
Advertisement
இன்று முதல் அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள். இறுதியாக நேற்று மாநில சுகாதாரத் துறையின் தலைமையகத்தில் இருந்து சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள சிஜிஓ வளாகம் வரை சுமார் 4 கிலோமீட்டர் அவர்கள் பேரணியாக சென்றனர். இந்த நிலையில் பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நேற்று 42 கிமீ தூரம் கொண்ட மாபெரும் ஜோதி பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று கலந்து கொண்டனர். இந்த பேரணி ஹைலேண்ட் பூங்காவில் தொடங்கியது. எரியும் தீப்பந்தங்களை ஏந்திச்சென்ற இந்த ஊர்வலம், ரூபி கிராசிங், விஐபி பஜார், சயின்ஸ் சிட்டி போன்ற முக்கிய இடங்கள் வழியாக சென்று ஷ்யாம்பஜாரில் முடிவடைந்தது.
Advertisement