தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் குளக்கரை ஆக்கிரமிப்பு அகற்றம்

Advertisement

பெரம்பூர்: கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 25வது தெருவில் முத்துமாரியம்மன் கோயில் குளத்தின் கரை அருகே சுமார் 8 குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் 43 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வசித்து வரும் வீட்டின் வெளியே ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பார்க்கிங் மற்றும் நிழற்குடை உள்ளிட்டவைகளை அமைத்திருந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறியும் ஆக்கிரமிப்புகளை அவர்கள் அகற்றவில்லை.

இந்நிலையில் சென்னை திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன் மேற்பார்வையில் செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் கோபி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ஜானகி சாம்ராஜ் மற்றும் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று, குளத்தின் கரையை ஆக்கிரமித்து இருந்த இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

இதன் மூலம் குளத்திற்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement