தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

17 ஆண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி; வெற்றியை மனைவிக்கு அர்ப்பணித்த கோஹ்லி: கலங்கிய கண்களுடன் உணர்ச்சிகர பேட்டி

அகமதாபாத்: ஐபிஎல் போட்டிகளில் விராட் கோஹ்லி இடம் பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 17 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாமல் தவித்து வந்தது. கடைசியாக நேற்று முன்தினம் நிறைவு பெற்ற இறுதிப் போட்டியில் அந்த அணியின் வெற்றிக் கனவு நனவானது.

அதையடுத்து கலங்கிய கண்களுடன் நிருபர்களை சந்தித்த விராட் கோஹ்லி உணர்ச்சிப் பெருக்குடன் கூறியதாவது:

கடந்த 17 ஆண்டுகளாக எந்தளவு மனக் கஷ்டத்தை அனுபவித்தேன் என்பதை வெறும் வார்த்தைகளால் கூற இயலாது. என் இளமை, முக்கியத்துவம் வாய்ந்த நேரம், அனுபவம் அனைத்தையும் பெங்களூரு அணிக்காக அர்ப்பணித்தேன். போட்டி நடைபெற்ற மைதானத்தில் பல முறை அழுவதை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டேன்.

இந்த மகத்தான வெற்றியை என் குடும்பத்தினருக்கு, குறிப்பாக என் அனைத்து சோதனை நாட்களிலும் என்னுடன் இருந்து சமாதான வார்த்தைகள் கூறி தேற்றி, என்னை தொடர்ந்து துடிப்புடன் ஆடச் செய்த மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இன்றைய தேதியின் கூட்டுத் தொகையும், ஐபிஎல் சீசன் எண்ணும் 18 ஆக அமைந்துள்ளது. கடவுளுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.