தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொடநாடு கொலை செய்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்? சீமான் கேள்வி

தூத்துக்குடி: கொடநாடு கொலை செய்த சார் யார், தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட சார் யார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி:  எங்களுடைய இறைவனுக்கு எங்கள் தாய் மொழியில் வழிபாடு இருக்காது, எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது என்பது பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எவ்வளவு பெரிய வெற்றி முழக்கம். பள்ளிக்கூடத்தில் இருக்காது, வழக்காடு மன்றத்தில் இருக்காது, வழிபாட்டு தலத்தில் இருக்காது.

ஒவ்வொரு முறையும் வழக்கு போட்டு அந்தந்த உரிமையை பெற வேண்டி இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். கொடநாட்டில் கொலை, கொள்ளையை செய்த சார் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த சார் யார், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்த 2 சார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. 15 பேர் செத்தது உண்மை. சுட்டது உண்மை. அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கொடுக்கப்பட்டு உள்ளது. என்றார்.

Related News