தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடநாடு கொலையில் சாட்சியை மிரட்டிய வழக்கு சயான், மனோஜ் விடுவிப்பு

ஊட்டி: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தற்போது ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட சிலர் ஊட்டியில் உள்ள தனியார் காட்டேஜ் ஒன்றில் தங்கியதாகவும், இரவில் கொடநாடு சென்று கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

அவர்கள் தங்கியதாக கூறப்படும் காட்டேஜின் உரிமையாளர் சாந்தாகுமாரியை போலீசார் 14வது சாட்சியாக சேர்த்தனர்.  இந்நிலையில், 2020ம் ஆண்டு சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர், சாந்தாகுமாரியை தொடர்பு கொண்டு சாட்சி அளிக்க கூடாது என்று மிரட்டல் விடுத்ததாக அவர் ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மீது நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சோலியா, சயான் மற்றும் வாளையார் மனோஜ் மீது தொடரப்பட்ட வழக்கு நிரூப்பிக்கபடாத நிலையில், இருவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

Advertisement