தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் 'கோடம்பாக்கம் ஸ்ரீ' போக்சோ வழக்கில் கைது!

சென்னை: அகில இந்திய இந்து மகாசபா தலைவர் 'கோடம்பாக்கம் ஸ்ரீ' போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார். இந்நிலையில், கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சகோதரர் மகளை அடிக்கடி ஸ்ரீகந்தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையடுத்து கோடம்பாக்கம் ஸ்ரீக்கு அந்த பள்ளி சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை சிறுமியின் அத்தையிடம் கூறியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 3 முறை சிறுமியின் அத்தை ஆசை வார்த்தை கூறி கானாத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று கோடம்பாக்கம் ஸ்ரீக்கு சிறுமியை இறையாகியுள்ளார்.

சமீபத்தில் இது தொடர்பாக சிறுமி வேலூரில் வசிக்கும் தனது தாயாரிடம் நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தியாகராய நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் ஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதேபோல் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தையையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News