தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் பலத்த காற்று மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் இன்றிரவு கரை கடக்கிறது. இதனால், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் ஒன்றான பூம்பாறை-மன்னவனூர் மலைச்சாலையின் குறுக்கே, இன்று காலை மரம் முறிந்து விழுந்தது. இதனால், சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்களை மரத்தினை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

Advertisement

இதேபோல, கூக்கால் மலைக்கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. மேலும், அருகில் சென்ற மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இந்த மரத்தையும் பொதுமக்களே அகற்றினர். மின்வாரிய அதிகாரிகள் அறுந்து விழுந்த மின்வயர்களை சீரமைத்து வருகின்றனர். எனவே, மலைக்கிராமங்களுக்கு செல்லும் சாலையில் இருக்கும் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement