தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் அருகே மயங்கி விழுந்த தாய் யானையின் அருகில் நின்று குட்டி யானை பாசப் போராட்டம்: கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே, மயங்கி விழுந்த தாய் யானை அருகே, நின்ற குட்டியானை யாரையும் நெருங்கவிடாமல் பாசப் போராட்டம் நடத்தியது. பின்னர் ஒருவழியாக இருவரையும் பிரித்து தாய் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவைகள் உணவு, தண்ணீருக்காக மலைக்கிராமங்களில் அவ்வப்போது புகுந்துவிடுகின்றன.

Advertisement

இந்நிலையில், கொடைக்கானல் அருகே, வில்பட்டி ஊராட்சி, பள்ளங்கி கோம்பை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்தது. இந்த யானை நேற்று கணேசபுரத்தில் உள்ள செல்வம் என்பவரது தோட்டத்தில் திடீரென மயங்கி விழுந்தது. அதன் அருகில் நின்ற குட்டி ஆண் யானை செய்வதறியாது அங்கும், இங்கும் அலைந்து பாசப் போராட்டம் நடத்தியது. தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் மயங்கி விழுந்த யானையை நெருங்க முயன்றனர். ஆனால், குட்டி யானை நெருங்கவிடாமல் மிரட்டியது.

கொடைக்கானலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு நேற்று மாலை கால்நடை மருத்துவர்கள் வந்தனர். பின்னர் தாய் யானையிடம் இருந்து குட்டி யானையை ஒருவழியாக பிரித்தனர். தாய் யானையை நேற்று நள்ளிரவு முழுவதும் கண்காணித்து 10 மணி நேரத்துக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். குட்டி யானை மற்றொரு இடத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாய் யானை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய் யானையை விட்டுப்பிரியாத குட்டி யானையின் பாசப் போராட்டம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

Related News