தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் ஒய்யாரமாக உலா வந்த காட்டெருமைகள்; மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலாபயணி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப்பகுதிக்குள் உலா வருவதும், குடியிருப்பு பகுதிக்குள் முகாமிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் இன்று இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டெருமைகள் திடீரென பேருந்து நிலையத்திற்குள் உலா வந்தது. இதனால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் பதறி ஓடினர். மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர்.

குறிப்பாக சாலையில் முன்பாக சென்ற காட்டெருமையை பார்த்து கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் பின் புறத்தில் வந்த மற்றொரு காட்டெருமையை கண்டு அலறியடித்து ஓடினார், நல்வாய்பாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த சுற்றுள்ள பயணி திரும்பி பார்த்ததால் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நில பகுதிக்குள் அந்த இரண்டு காட்டெருமைகலும் சென்றது. இதனால் பேருந்து நிலைய பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இது போன்ற வன விலங்குகள் அடிக்கடி உலாவருவது மனித விலங்கு மோதல் ஏற்படுவதற்கு சூழல் நிலவி வருவதால் , வேட்டை தடுப்பு பணியாளர்களை பணியில் அமர்த்தி காட்டெருமைகள் உலா வருவதை தடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது.

Advertisement

Related News