தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் சுற்றித்திரியும் செந்நாய்கள் கூட்டம்

*மலைக்கிராம மக்கள் பீதி

Advertisement

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகளின் கூட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக செந்நாய்களின் கூட்டம் முகாமிட்டு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. செந்நாய்கள் எனப்படும் காட்டு நாய்கள் கூட்டமாக வாழும் தன்மை உடையது.

வன விலங்குகளை வேட்டையாடும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மன்னவனூர் பகுதியில் உள்ள கன்றுக்குட்டியை கடித்து குதறியது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் முகாமிட்டிருந்த செந்நாய்களின் கூட்டத்தை இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

மேல்மலைப் பகுதிகளான மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருக்கும் செந்நாய்களின் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement