தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பாதையில் விழுந்த மரம்: 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் இருந்து மேல் மலை கிராமங்களுக்கு செல்ல கூடிய பிரதான சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக அவ்வப்போது கனமழையும், ஒரு சில நேரங்களில் சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் மரங்கள் முறிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது.

Advertisement

நேற்று மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலை கொடைக்கானலில் இருந்து மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னமனூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்ல கூடிய பிரதான சாலையில், பூம்பாறை அருகே சாலையின் நடுவே ஒரு ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

அந்த பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அகற்றிய பிறகு தற்போது போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் மேல்மலை கிராமங்களுக்கு செல்ல கூடிய சுற்றுலாப்பயணிகள் மற்றும் அங்கிருந்து வரக்கூடிய விவசாயிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற மழை காலங்களில் ஆபத்தான நிலையில் இருக்க கூடிய மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

Advertisement