தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் சவ்சவ் விலை சரிந்தது: விவசாயிகள் கவலை

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் சவ்சவ் காய் விளைச்சல் அதிகமிருந்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தோட்டக்கலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், அவரை, முட்டைக்கோஸ், சவ்சவ் உள்ளிட்டவற்றை அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.
Advertisement

இங்கு விளையும் காய்கறிகள் மதுரை, சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள பேத்துப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் சவ்சவ் அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் சவ்சவ் விளைச்சல் அமோகமாக இருந்தும், அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கீழ்மலை பகுதிகளில் சவ்சவ் விளைச்சல் அதிகரிப்பால் விலை மிகவும் குறைந்து விற்பனையாகிறது. கடந்த காலங்களில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்று வந்த சவ்சவ், தற்போது ஒரு கிலோ ரூ.5 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News