தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் பயங்கரம் பற்றி எரிந்த சாக்லெட் கடைகள் பல லட்சம் பொருட்கள் கருகின

கொடைக்கானல் : கொடைக்கானலில் சாக்லெட் கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாயின.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருபவர்கள்.

Advertisement

இங்கு வருபவர்கள் கொடைக்கானலின் பிரசித்தி பெற்ற ஹோம்மேட் சாக்லெட்கள், தைலம் மற்றும் இங்கு விளையக்கூடிய காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். சுற்றுலாப் பயணிகளுக்காக, கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச்சாலை கல்லறைமேடு பகுதியில் மட்டும் சாக்லெட், காய்கறிகள், பழங்கள், தைலம் வியாபாரம் செய்யக்கூடிய 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இங்குள்ள ஒரு சாக்லெட் கடையில் மராமத்துப் பணிகள் நேற்று நடந்து வந்தது. அச்சமயம் வெல்டிங் வேலை செய்த போது திடீரென தீ பரவி அருகிலுள்ள ஒரு கடையில் பற்றியது. தொடர்ந்து பரவிய தீயால் அடுத்தடுத்து 4 கடைகளிலும் தீப்பற்றி குபுகுபுவென எரிய துவங்கியது. தகவலறிந்ததும் கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் 5 கடைகளும் முழுமையாக எரிந்து பல லட்சம் மதிப்புள்ள சாக்லெட், தைலம் உள்ளிட்ட பொருட்கள் நாசமாகின என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த தீ விபத்தால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டுக்குள் வராத தீ காரணம் என்ன?

தீ விபத்து நடந்த கடைகளில் தலை வலி, கால் வலிக்கான தைலங்களும் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை பற்றி எரிந்ததன் காரணமாகவே தீயின் தாக்கம் அதிகளவில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே தீயை அணைப்பதற்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News