தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுழற்றி அடித்த சூறாவளி காற்றால் கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்று காலை வீசிய பலத்த காற்றால் மலைச்சாலையில் 2 இடங்களில் மரங்கள் விழுந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் `டிட்வா’ புயல் காரணமாக அண்மையில் பலத்த மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இருப்பினும், பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. நள்ளிரவில் கடுங்குளிர் நிலவுகிறது.

Advertisement

இந்நிலையில், கொடைக்கானலில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் டைகர் சோலை அருகே, ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனம் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதேபோல, பெருமாள்மலை அருகிலும் மற்றொரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் இந்த பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து வாகன போக்குவரத்து சீரானது.

Advertisement

Related News