தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் இளம் பெண் உயிரிழப்பு

 

Advertisement

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே அடுக்கம் சாமக்காட்டு பள்ளம் என்ற இடத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து தீபிகா என்ற இளம் பெண் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது பெருமாள் மலை கிராமம் சாமக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை செல்லதுரைக்கு ராஜசேகரன் என்ற மகனும் ஒரு மகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் செல்லதுரையில் மகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. செல்லதுரையின் மகள் திருமணத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்ததாக கூறப்படக்கூடிய நிலையில் தீபிகா என்ற பெண் ஊட்டியை பூர்வீகமாக கொண்ட இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று செல்லதுரையின் மகள் திருமணத்திற்காக வந்த தீபிகாவை செல்லதுரையின் மகன் ராஜசேகரன் அழைத்துச் செல்லும் போது செல்லதுரையின் தோட்ட பகுதியை பார்வையிட ராஜசேகரன் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக ராஜசேகரன் மற்றும் தீபிகா (22)பயணித்த ஜீப் வாகனம் செல்லதுரையின் தோட்டம் அருகே உள்ள சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தீபிகா உயிரிழந்து விட்டார் இரவு முழுக்க படுகாயங்களுடன் துடிதுடித்த ராஜசேகரன் தற்போது முதற்கட்ட சிகிச்சை முடித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரவு முழுக்க கவிழ்ந்த வாகனத்தில் பரிதவித்த இரு உயிர்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபிகாவின் உடலை போலீசார் மீட்ட நிலையில் தற்போது தீயணைப்பு துறையினர் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisement