தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொடைக்கானலில் 50 அடி கிணற்றில் விழுந்த காட்டெருமை: மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

திண்டுக்கல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் அருகே 50 அடி கிணற்றில் தவறிவிழுந்த காட்டெருமையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல் மலை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டெருமைகள் கூட்டம் உலவி வருகிறது. காட்டெருமைகள் உலவி வருவதால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், விவசாயிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவது உள்ளிட்ட விலங்குகள் மோதல் அதிகரித்து காணப்படுகிறது.

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் எப்போதுமே பரபரப்பான இடமாக இருக்கும். இந்த இடத்தில் இன்று காட்டெருமை கூட்டம் உலா வந்துள்ளது . அப்போது 50 அடி கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து இருக்கிறது.காட்டெருமை மீட்பதற்காக தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ள நிலையில், காட்டெருமை மீட்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர.

இந்த வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக காட்டெருமை கிணற்றில் விழக்கூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.காட்டெருமைகள் உலவி வருவது தொடர்பாக பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது. மேலும், கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் கடுமையான பனிமூட்டம் மற்றும் மழையானது பெய்து வருவதால் இந்த மீட்பு பணியில் தற்போது சிக்கலும் நீடித்து வருகிறது.