தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொச்சியில் ராட்சத குடிநீர் தொட்டியில் திடீர் உடைப்பு

*வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

Advertisement

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கொச்சி நகரின் மைய பகுதியில் 1.35 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் ெதாட்டி நேற்று அதிகாலை திடீரென உடைந்ததில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தம்மனம் பகுதியில் குடிநீர் வழங்கல் வாரியத்தின் சார்பில் 1.35 கோடி கொள்ளளவு கொண்ட பிரமாண்ட ராட்சத குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து தான் கொச்சி நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த தொட்டி சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீரென குடிநீர் டேங்கின் ஒரு பகுதி உடைந்து சேதம்

அடைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தொட்டியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அந்த பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.

ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் உள்பட வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சில வீடுகளில் காம்பவுண்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன.

பிரமாண்ட குடிநீர் தொட்டி உடைந்ததால் கொச்சி நகரில் குடிநீர் வினியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் விரைந்துள்ளனர். குடிநீர் தொட்டி பழமை காரணமாக உடைந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News