தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொச்சி விமான நிலையத்தில் ரூ.2.3 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: சென்னை ஆசாமி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்திய ரூ. 2.3 கோடி மதிப்புள்ள உயர் ரக கலப்பின கஞ்சா கடத்திய சென்னை ஆசாமியை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

தாய்லாந்து, வியட்நாம், ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கொக்கைன், எம்டிஎம்ஏ, உயர் ரக கலப்பின கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் பெருமளவு கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

ஆனாலும் போதைப் பொருள் கடத்தல் தொடர்கிறது. இந்தநிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக கொச்சி வந்த ஒரு தனியார் விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கொச்சி வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடந்தது.

இதில் சென்னையை சேர்ந்த பினு பெபின் (25) என்ற பயணி கொண்டு வந்திருந்த பேக்கில் பரிசோதனை செய்தபோது அதில் 4 பாக்கெட்டுகளில் மொத்தம் 2.3 கிலோ உயர் ரக கலப்பின கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு பாக்கெட்டிலும் 574 கிராம் கஞ்சா இருந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ 2.3 கோடி என்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பினு பெபினை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement