வீட்டில் தனியாக தூங்கியபோது கத்தி முனையில் மிரட்டி மாணவி பலாத்காரம்: கேரள வாலிபர் கைது
Advertisement
பிறகு விமலாவிடம், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத விமலா, தனக்கு நேர்ந்த கொடுமையை நண்பர்கள் உதவியுடன் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாராக அளித்தார். போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின்படி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நந்துலால் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே நந்துலால் செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்த போது, அவர் சொந்த ஊரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்று, நந்துலாலை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement