தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கத்தியை சுழற்றியபடி இன்ஸ்டாவில் ரீல்ஸ்: வாலிபர் கைது

பெரம்பூர்: கத்தியை சுழற்றியபடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் பாலகிருஷ்ணன் நகர் பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு பகுதியில், கொளத்தூர் உதவி ஆய்வாளர் மதன்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தியை சுழற்றியபடி, தனது நண்பருடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்டது தெரியவந்தது.
Advertisement

விசாரணையில், அவர் கொளத்தூர் சிட்டிபாபு நகரைச் சேர்ந்த சந்துரு (19) என்பதும், இவர், தனது நண்பர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவருடன் சேர்ந்து, கத்தியுடன் பல்வேறு ரீல்ஸ்களை செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதும் தெரிய வந்தது. பின்னர் சந்துரு மீது வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ரஞ்சித் என்பவரை தேடி வருகின்றனர். இதனையடுத்து அந்த வாலிபரை வைத்து, இதுபோன்ற ரீல்சும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம், நல்லொழுக்கமே நன்மை பயக்கும் என்று வீடியோ எடுத்து, சென்னை காவல்துறை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் படத்துடன் கூடிய விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது.

Advertisement

Related News