தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட மாமாங்கம் ஆற்றுப்பாலம் போதை பொருட்கள் பயன்படுத்தும் இடமாக மாறிய அவலம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட்ட மாமாங்கம் ஆற்றுப்பாலம் போதை பொருட்கள் பயன்படுத்தும் இடமாக மாறி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம் ஊராட்சி பகுதியில் பழமை வாய்ந்த மாமாங்கம் ஆறு உள்ளது. மழை காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் வரும்போது ஆற்றை கடக்க வழியின்றி அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்களின் நிலையை உணர்ந்த பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி இங்கு பாலம் கட்ட முயற்சி மேற்கொண்டார்.

Advertisement

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு திட்டத்தின் மூலம் மாமாங்கம் ஆற்றின் குறுக்கே குழாய்கள் அமைந்து பாலம் கட்ட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு பணி துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த பாலம், தற்போது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவது வேதனையை அளிக்கிறது.

போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள், இரவு நேரம் மட்டுமின்றி பகலிலும் கும்பலாக பாலத்தின் மீது அமர்ந்து, மது அருந்துவது, கஞ்சா குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் பாலத்தின் வழியாக செல்ல மிகுந்த அச்சப்பட்டு வருகின்றனர். போலீசார் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News