தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழ்பென்னாத்தூர் பகுதிக்கு ரூ.11.41 கோடியில் தென்பெண்ணை குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணி

*துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்

Advertisement

திருவண்ணாமலை : தென்பெண்ணையாற்று குடிநீரை பயன்படுத்தி பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில், கீழ்பென்னாத்தூர் பகுதிக்கான தென்பெண்ணை கூட்டு குடிநீர் திட்டம் மிக முக்கியமானது. இத்திட்டத்தின் மூலம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட 156 கிராமப் பகுதிகள் குடிநீர் வசதியை பெறுகின்றன.

இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, கீழ்பென்னாத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பெரும்பான்மையாக தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு ரூ.11.41 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்மூலம், சுமார் 60 கி.மீ நீளத்திற்கு தென்பண்ணை கூட்டு குடிநீர் திட்ட நீருந்து குழாய்கள் மற்றும் 33 மின் மோட்டார்கள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இப்பணியை மேற்கொள்கிறது. இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஏர்பாக்கம் பகுதியில் தென்பெண்ணை கூட்டு குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் கு.முத்துராமன், நிர்வாகப் பொறியாளர் சுரேஷ் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement