தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கீழ்பாக்கத்தில் பிரபல ஹோட்டலில் அறைகள் எடுத்து கஞ்சா புகைத்த 18 பேர் கைது..!!

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் பிரபல ஹோட்டலில் அறைகள் எடுத்து கஞ்சா புகைத்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை கீழ்பாக்கம் EVR சாலையில் அமைத்துள்ள பிரபல ஹோட்டலில் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா, மெத்தப்பட்டமைன் போதை பொருட்களை பயன்படுத்தி 18 பேர் அறைகள் எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது.

Advertisement

இதனை அடுத்து, உடனடியாக போலீசார் 18 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் களிடமிருந்து 3 கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 அரை கிராம் கஞ்சா, 18 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்தகட்ட விசாரணையில் கடந்த 5ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மெத்தப்பட்டமைன், கஞ்சா, மது உள்ளிட்டவை பார்ட்டியில் ஈடுபட்டு. அதன் பின்னர் பக்கத்தில் இருந்த 3 அறைகளில் தங்கி இருந்ததால் இவர்கள் பிடிபட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், இது தொடர்பாக பல்வேறுகட்ட விசாரணையில் ஈடுபட்ட போது இதில் இசையமைப்பாளரின் மகளும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 18 நபர்களையும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியபோது அவர்களுக்கு நீதிமன்ற ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதே போல் கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News