தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம்: ரயில்வே அமைச்சர் தகவல்

திருமலை: ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஆந்திராவில் அக்டோபர் 2023ம் ஆண்டு 29ம் தேதி அன்று ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் கந்தகப்பள்ளியில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது பின்னால் வந்த விசாகப்பட்டினம் பலாசா பயணிகள் ரயில் மோதியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வேறு துறை அதிகாரிகள் விசாரித்து நடத்தி வந்தனர். இந்நிலையில் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கந்கப்பள்ளி கிராமம் அருகே கடந்த ஆண்டு லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் ஆகியோர் செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தபோது இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: அக்டோபர் 2023 ஆண்டு 29ம் தேதி அன்று ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் கந்தகப்பள்ளியில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது பின்னால் வந்த விசாகப்பட்டினம் பலாசா பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில், பலாசா பயணியரில் ரயிலை ஓட்டி வந்த இரண்டு லோகோ பைலட்டுகளும் ரயிலை ஓட்டும்போது கவனம் சிதறி, ரயில் ஓட்டும் போது செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் பணியில் இருக்கும் லோகோ பைலட்களை தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பைக் கொண்டு வந்துள்ளோம். விபத்து நடந்த மறுநாளே விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, அறிக்கை வருவதற்கு முன், விபத்தை ஏற்படுத்திய லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.