தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

41 பேர் பலியானதால் என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் லம்பி தவித்த புஸ்ஸி ஆனந்த்

சென்னை: கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் போது ஆதவ் அர்ஜுனா, அருண், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் எங்கே போனார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

சம்பவம் நடந்த போது புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் இருந்ததாகவே கூறப்படுகிறது. ஆனால் அவரும் அவசரமாக அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில், தனது காரை நிறுத்தி நடுரோட்டில் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த வீடியோ வைராலாகி உள்ளது.

என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்று கொண்டிருக்கும் புஸ்ஸி ஆனந்த் புலம்பிக் கொண்டிருப்பதும், அவரை பின்தொடர்ந்து சென்ற பத்திரிகையாளர்களை அவரது உதவியாளர் ஒருவர் சந்திக்க விடாமல் தடுத்ததும் அந்த வீடியோவில் உள்ளது.

நடுரோட்டில் நின்று கொண்டிருந்த புஸ்ஸி ஆனந்த்தை சந்திக்க பத்திரிகையாளர் ஒரு முற்பட்டபோது, அவரது உதவியாளர் தடுத்து, ‘என்ன பண்றது என்றே தெரியவில்லை. நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். காலில் கூட விழுகிறேன்... தயவு செய்து பேட்டி எதுவும் எடுக்க வேண்டாம் அண்ணே..’ என்கிறார். மேலும், இத்தனை உயிர்கள் போயிருக்கிறது, பத்திரிகையாளர்கள் மனிதாபமானத்துடன் நடந்து கொள்ளுங்கள், என்ன பண்றது, ஏது பண்றது என்றே தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், சூழ்நிலை சரியில்லை... வேண்டாம் என்று தடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisement