தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குஜராத்தில் 260 பேர் பலியான விபத்து; விமான தயாரிப்பு நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு: பயணிகளின் 4 உறவினர்கள் அதிரடி

வாஷிங்டன்: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் கருவி வடிவமைப்பில் இருந்த குறைபாடே விபத்துக்கு காரணம் எனக் கூறி, தயாரிப்பு நிறுவனங்கள் மீது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் எழும்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 12 ஊழியர்கள், 229 பயணிகள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமானத்தைத் தயாரித்த நிறுவனம் மற்றும் அதன் முக்கிய பாகங்களைத் தயாரித்த நிறுவனம் ஆகியவற்றின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertisement

விமானத்தின் எரிபொருள் இயந்திரத்திற்கு எரிபொருளை கொண்டு செல்லும் இயந்திரத்தின் வடிவமைப்பில் இருந்த குறைபாடு காரணமாகவே, விமானம் புறப்பட்ட உடன் அதன் இயந்திரங்களின் செயல்பாடு நின்றதாகவும், இதுவே விபத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அலட்சியமாகவும், குறைபாடுடனும் வடிவமைக்கப்பட்ட எரிபொருள் துண்டிப்பு கருவியை விமானத் தயாரிப்பு நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்தக் குறைபாடு குறித்த அபாயம் பற்றி இரு நிறுவனங்களுக்கும் ஏற்கனவே தெரியும் என்றும், இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டே அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியும், இந்த பேரழிவைத் தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையிலும், எரிபொருள் கட்டுப்பாட்டு கருவி ‘துண்டிப்பு’ நிலைக்குச் சென்றதே விபத்துக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், விமானிகள் அறையில் பதிவான உரையாடலில், ‘ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்?’ என ஒரு விமானி கேட்க, ‘நான் நிறுத்தவில்லை’ என மற்றொரு விமானி பதிலளித்ததும் பதிவாகி இருந்தது. விமான நிறுவனத்தின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் இழப்பீடு கோரி இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement