தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கேரளாவுக்கு ரூ.10,000 கோடி வரை வருவாய் இழப்பு: ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

 

Advertisement

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கேரளா வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த 4ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் நடைபெற்றது. இதில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை இரண்டு அடுக்குகளாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என கேரளா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் நேற்று டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “ஜிஎஸ்டி வரி விகிதம் 4 அடுக்கிலிருந்து 2 அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகித குறைப்பை கேரளா வரவேற்கிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி விகித குறைப்பின் பலன்கள் பொதுமக்களை சென்றடைய வேண்டும்.

மேலும், சிமென்ட், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் காப்பீட்டு துறையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி இழப்பீடு ஏற்படும். இதில் கேரளாவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

மாநிலங்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் ஜிஎஸ்டி விகித மாற்றம் செய்யப்படவில்லையெனில், வருங்காலங்களில் பொதுநிதிக்கு ஆபத்தாக அமையும். மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை சரி செய்யாவிட்டால், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுவிநியோக முறை போன்ற சமூக பொறுப்புகளை தொடர முடியாத சூழல் ஏற்படும்” என்றார்.

 

Advertisement