கேரளாவில் விசிஆர், 3 வீடியோ கேசட்டுடன் மாயம் 29 வருடம் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
Advertisement
ஆனால் மறுநாள் அவற்றை கடையில் ஒப்படைக்காமல் ஐயப்பன் தலைமறைவானார். இதுகுறித்து சபீர் அஞ்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை தேடி வந்தனர். பல இடங்களில் தேடியும் அவர் சிக்கவில்லை. பல மாதங்கள், பல வருடங்கள் ஆகியும் ஐயப்பன் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. ஆனாலும் அஞ்சல் போலீசார் இந்த பைலை மூடாமல் வைத்திருந்தனர்.
இந்தநிலையில் 29 வருடங்களுக்குப் பின்னர் ஐயப்பன் குறித்த விவரங்கள் போலீசுக்கு தெரியவந்தது. அவர் கோழிக்கோடு அருகே முக்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு எஸ்டேட்டில் பணிபுரிந்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அஞ்சல் போலீசார் அங்கு விரைந்து சென்று ஐயப்பனை கைது செய்து கொல்லத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
Advertisement