தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் இருந்து ஆன்லைன் மூலம் வாங்கி போதை பொருள் விற்ற ஐடி ஊழியர் சிக்கினார்: ஓஜி கஞ்சா, கெட்டமைன் பறிமுதல்

சென்னை: கேரள மாநிலத்தில் போதை பொருள் விற்ற நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதிகளவில் சென்னைக்கு ஆர்டரின் பெயரில் போதை பொருட்கள் அனுப்பியது தெரியவந்தது.  இதுகுறித்து சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

அதன்பேரில், அதிகாரிகள் மேற்கு சைதாப்பேட்டை ராமாபுரம் ராமசாமி தெருவில் வசித்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஐடி ஊழியரான மல்லிகா அர்ஜூன் சர்மா (28) வீட்டில் அதிரடி சோதனை நடத்தி 120 எல்எஸ்டி ஸ்டாம்ப், 2.61 கிராம் கெட்டமைன், 58 மில்லி கிராம் ஓஜி கஞ்சா மற்றும் கஞ்சா பேஸ்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர் அளித்த தகவலின் படி, தனது தொழில் பாட்னரான மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகர் 1வது தெருவை சேர்ந்த பாலா சூர்யா (28) என்பவர் மூலம் சென்னை முழுவதும் ஆர்டரின் பெயரில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து பாலா சூர்யா வீட்டில் போதை பொருள் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 20 எல்எஸ்டி ஸ்டாம்புகள், 5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து ஐடி ஊழியரான மல்லிகா அர்ஜூன் சர்மா மற்றும் அவரது கூட்டாளி பாலா சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement