கேரளாவில் ஓணம் பண்டிகை : திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்வு!!
திண்டுக்கல் : கேரளாவில் ஓணம் பண்டிகை செப்.5ல் கொண்டாடப்படுவதை ஒட்டி திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 டன் பூக்களை கேரள வியாபாரிகள் வாங்குகின்றனர்.கிலோ ரூ.30க்கு விற்ற வாடாமல்லி தற்போது ரூ.200க்கு விற்பனை, ரூ.20க்கு விற்ற செண்டுமல்லி விலை ரூ.170ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement