தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் நிபா பாதித்து பலியான மாணவியுடன் ஒரே வார்டில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்: உடலை புதைக்க தடை

Advertisement

திருவனந்தபுரம்: மலப்புரத்தில் நிபா பாதித்து பலியான மாணவியுடன் தொடர்பில் இருந்த பெண் நேற்று மரணமடைந்தார். இவருக்கு நிபா பாதித்துள்ளதா என்பது உறுதி செய்யப்படாததால் பரிசோதனை முடிவு வரும் வரை உடலை புதைக்க சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள மங்கடா பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி நிபா பாதித்து உயிரிழந்தார். இவர் தவிர பாலக்காட்டைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கும் நிபா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்த 450க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். பலியான மாணவி சிகிச்சை பெற்று வந்த கோட்டக்கல் தனியார் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் இதய நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவரையும் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இந்தப் பெண் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். முதற்கட்ட பரிசோதனையில் இவருக்கு நிபா இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் கூடுதல் பரிசோதனைக்காக இவரது ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரி பூனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து பரிசோதனை முடிவு வரும் வரை உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

Advertisement

Related News