தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு டிச. 20 வரை ஜனாதிபதி கெடு

புதுடெல்லி: இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி நிஷா பானு வரும் 20ம் தேதிக்குள் கேரள உயர்நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜே.நிஷா பானுவை, நிர்வாகக் காரணங்களுக்காகக் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யக் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த அக்டோபர் 14ம் தேதி வெளியிட்டது.

Advertisement

ஆனால், இரண்டு மாதங்களாகியும் அவர் புதிய பொறுப்பை ஏற்காமல், தனது மகனின் திருமணம் மற்றும் பணி மூப்புப் பாதிப்பு (சீனியாரிட்டி) ஆகிய காரணங்களைக் கூறி விடுப்பில் இருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 3வது மூத்த நீதிபதியாக இருந்த அவர், கேரளாவிற்குச் சென்றால் 9வது இடத்திற்குத் தள்ளப்படுவார் என்பதால் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இந்த இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதேவேளையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் பணியில் சேராதது ‘நீதித்துறை ஒழுக்கமின்மை’ என மற்றொரு தரப்பு வழக்கறிஞர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘நீதிபதி நிஷா பானு வரும் 20ம் தேதிக்குள்ளாகக் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்க வேண்டும்’ என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கமளித்த ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ‘அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 217-ன் படி ஒரு நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டாலே, அவர் பழைய பதவியை காலி செய்ததாகக் கருதப்படுவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Related News