தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் தொடர்ந்து கன மழை; ஒரே நாளில் 8 பேர் பரிதாப பலி.! இரவு நேர பயணத்துக்கு தடை சுற்றுலா மையங்கள் மூடல்

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இதன்காரணமாக இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசாவுக்கு மேல் மையம் கொண்டது. இதன்காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுவது, மண் சரிவு, மரங்கள் சாய்வது என நிலைமை கடுமையாக இருந்து வருகிறது. நேற்றும் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், கனமழைக்கு கேரளாவில் நேற்று ஒரே நாளில் 8 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

திருவனந்தபுரம் வழயிலாவில் நேற்று இரவு மோளி (42) என்ற பெண் தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத மரம் ஒன்று கார் மீது சாய்ந்தது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி மோளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயமடைந்தார். இந்த நிலையில் மழை இன்னும் ஓயவில்லை. இன்று 6 வடமாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் தவிர மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு உள்பட 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்திலுள்ள பொன்முடி, கோட்டயம் மாவட்டத்திலுள்ள இலவீழாபூஞ்சிறா, இல்லிக்கல் கல், மார்மலா அருவி, பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி, நெல்லியாம்பதி, பரம்பிக்குளம் ஆகிய பகுதிகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் ஈராற்றுபேட்டை-வாகமண் சாலையில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் மலையேற்றத்தை நிறுத்தி வைக்கவும், சாகச பூங்காக்களை மூடவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வரும் 19ம்தேதி பலவீனமடைந்த பின்னர் வடமேற்கு வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 3ம் தேதி வரை கேரளாவில் பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement