தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சி: தடுத்து நிறுத்த கட்சிகள் வேண்டுகோள்

சென்னை: சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட முயலும் கேரள மாநில அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர் கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Advertisement

* தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை: காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள அரசு, தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணையை கட்டி வருகிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்படுவர். உடனடியாக, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை தடுத்த நிறுத்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

* பாமக தலைவர் அன்புமணி: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக கேரள அரசை தொடர்பு கொண்டு, நிறுத்தும்படி எச்சரிக்க வேண்டும்.

* தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சிக்கிறது. இதனால் தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவர். இதனை தமிழக அரசு முக்கியப் பிரச்னையாக கருதி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் அக்கறை காட்ட வேண்டும்.

Advertisement

Related News