தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளா கால்பந்து போட்டி: மார்ச்சில் மெஸ்ஸி ஆடுவார்: மாநில அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வரும் 2026 மார்ச்சில் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து போட்டியில் விளையாடும் என, கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் கூறியுள்ளார். கேரளாவின் மலப்புரத்தில் நேற்று நடந்த, கேரள அரசின் விளையாட்டு தொடர்பான தொலைநோக்குப்பார்வை குறித்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் பங்கேற்றுப் பேசினார்.

Advertisement

அப்போது அவர் கூறியதாவது: அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு அணியிடம் இருந்து 2 நாட்களுக்கு முன், இ-மெயில் பெறப்பட்டது. அதில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து போட்டியில் ஆடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது. அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருவதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. வருங்காலத்தில் கேரளாவில் பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கொச்சியில் உள்ள ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா அணி இம்மாதம் விளையாடும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தோம். இருப்பினும், அதற்கான ஒப்புதல்கள் கிடைக்காததால், அந்த போட்டியை நடத்த முடியாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement