தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த தான்சானியா நாட்டு நீதிபதி மகன் தோழியுடன் கைது: பஞ்சாப் பல்கலையில் படித்துக்கொண்டே ரகசிய தொழில்

திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக பெங்களூரு, பஞ்சாப் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவு எம்டிஎம்ஏ போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட காசர்கோட்டை சேர்ந்த இப்ராகிம் முசம்மில் (27) மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த அபிநவ் (24) , முகம்மது ஷமில் (28 ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன. மேலும் கைதானவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து டேவிட் என்பவருக்கு பெருமளவு பணம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இவர்கள் இருவரும் பஞ்சாப்பில் தங்கி இருப்பது தெரியவந்தது.
Advertisement

எனவே டேவிட் மற்றும் ஹருணாவை பிடிப்பதற்காக குன்னம்குளம் போலீசார் பஞ்சாப் விரைந்தனர். அங்கு நடத்திய தீவிர விசாரணையில் பக்வாரா என்ற இடத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த டேவிட் என்டமி (22) மற்றும் அத்கா ஹருணா (24) என்ற இளம்பெண் ஆகிய இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் டேவிட் என்டமி மற்றும் அத்கா ஹருணா ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மவுலி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

டேவிட் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பும், அத்கா பிபிஏ படிப்பும் படிக்கின்றனர். மேலும் டேவிட் என்டமி தான்சானியா நாட்டில் உள்ள நீதிபதியின் மகன் என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து தான் போதைப்பொருள் பிசினஸ் செய்து வந்துள்ளனர். இருவரையும் குன்னம்குளம் போலீசார் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிடிபட்ட இருவருடன் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News