தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலாத்கார வழக்கில் கேரள காங்கிரஸ் எம்எல்ஏவை டிச.15 வரை கைது செய்ய தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலை வரும் 15ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் மிரட்டி கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் புகார் அளித்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement

இதுகுறித்து அறிந்த ராகுல் மாங்கூட்டத்தில் தலைமறைவானார். இந்நிலையில் ராகுல் மாங்கூட்டத்தில் மீது மேலும் ஒரு இளம்பெண் பலாத்கார புகார் அளித்ததை தொடர்ந்து இவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைத்து, அதுவரை ராகுல் மாங்கூட்டத்திலை கைது செய்ய தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

* நடிகைக்கு கொலை மிரட்டல்

காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக முதலில் புகார் கூறிய நடிகை ரினி ஆன் ஜார்ஜின், கொச்சியில் உள்ள வீட்டுக்கு சென்ற 2 பேர் ராகுல் மாங்கூட்டத்திலை தொட்டால் தலையை துண்டித்து கொலை செய்வோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து நடிகை ரினி ஆன் ஜார்ஜின் தந்தை பரவூர் போலீசில் புகார் செய்தார்.

Advertisement