தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் ஆற்றில் விழுந்த கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிர் தப்பினர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கூகுள் மேப்பை பார்த்து பயணம் செய்த 5 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினரின் கார் ஆற்றில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (57). தனது குடும்பத்தினர்களான சதானந்தன், விசாலாட்சி, ருக்மணி கிருஷ்ணபிரசாத் ஆகியோருடன் ஒரு காரில் நேற்று அருகிலுள்ள குத்தாம்புள்ளிக்கு ஜவுளி வாங்குவதற்காக சென்றார். இவர்களுடன் மேலும் சில உறவினர்கள் வேறு ஒரு காரில் சென்றனர்.
Advertisement

ஜவுளி வாங்கிவிட்டு அனைவரும் நேற்று இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பாலகிருஷ்ணனின் கார் முன்னால் சென்று கொண்டிருந்தது. இவர் முதன்முதலாக இந்தப் பாதையில் வருவதால் கூகுள் மேப்பை பார்த்தபடி காரை ஓட்டினார். வழியில் காயத்ரி ஆற்றுக்கு அருகே ஒரு தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையை ஒட்டியுள்ள ரோடு வழியாகத்தான் கோட்டக்கல்லுக்கு செல்ல வேண்டும். ஆனால் கூகுள் மேப்பில் அந்த வழியை காண்பிக்கவில்லை. அப்போது எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணனின் கார் ஆற்றில் பாய்ந்தது. அதைப் பார்த்த பின்னால் வந்து கொண்டிருந்த அவரது உறவினர்கள் விரைந்து சென்று ஆற்றில் சிக்கிய அனைவரையும் மீட்டனர். இதுகுறித்து அறிந்ததும் பழையன்னூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் அனைவரும் மீட்கப்பட்டனர். இந்த விபத்து நடந்தபோது பாலகிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு இருந்ததால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று போலீசார் கூறினர். இதே பகுதியில் இதற்கு முன்பும் விபத்து நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News