தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் சாவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சலுக்கு நேற்று மேலும் ஒருவர் பலியானார். இதையடுத்து கடந்த 1 மாதத்தில் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வயநாடு மாவட்டம் பத்தேரியை சேர்ந்த ரதீஷ், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாத குழந்தை, 9 வயது சிறுமி அமயா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரம்லா, ஷோபனா (56) ஆகியோர் கடந்த சில வாரங்களில் இறந்தனர்.

Advertisement

15க்கும் மேற்பட்டோர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜி (51) என்பவர் இறந்தார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் அமீபா மூளைக் காய்ச்சலால் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அமீபா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement